கந்தளாயில் இருவர் மரணம்!

You are currently viewing கந்தளாயில் இருவர் மரணம்!

திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதியின் ஜயபுர பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியும் முச்சக்கரவண்டியும் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ள நிலையில் இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் திவுலபிடிய படேபொல பகுதியைச் சேர்ந்த கே.நதீக சம்பத்குமார (38 வயது) மற்றும் புத்தளம் – முந்தலம பகுதியைச் சேர்ந்த விஜயசிங்க ஆராய்ச்சிலாகே இஷான் சமிந்த (35 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை பாரவூர்தி சாரதியான ஊறுவத்த கதன்ஹேனவத்த பகுதியைச் சேர்ந்த பத்தினிகே பியனந்த (58 வயது) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தம்பலாகாமம் காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று கந்தளாய் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள