கனடாவில் ஒரே நாளில் 144 பேர் மரணம்! – கியூபெக்கில் மட்டும் 102 பேர்!

You are currently viewing கனடாவில் ஒரே நாளில் 144 பேர் மரணம்! – கியூபெக்கில் மட்டும் 102 பேர்!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும், 144 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 1834 ஆக அதிகரித்துள்ளது. கியூபெக்கில் மாத்திரம் நேற்று 102 பேர் உயிரிழந்தனர். ஒன்ராறியோவில் 38 பேர் மரணமாகியுள்ளனர்.

அதேவேளை, நேற்று புதிதாக 1591 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் தொகை, 38,422 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கியூபெக்கில் 807 பேரும், ஒன்ராறியோவில் 551 பேரும் புதிதாக தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள