கரவெட்டியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

You are currently viewing கரவெட்டியில் வீட்டின் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!

நெல்லியடி சிறீலங்கா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுவளவு – கரவெட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாதோரால் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் வீட்டில் உள்ள சொத்துக்கள் எரிந்து நாசமாகின. இருப்பினும் உயிர்ச் சேதங்கள் எவையும் ஏற்படவில்லை. குறித்த வீட்டின் பின் பகுதியில் இருந்து பெற்றோல் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments