கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – 11 ஆவது நாளாக தொடர்ந்த போராட்டம்!

You are currently viewing கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் – 11 ஆவது நாளாக தொடர்ந்த போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் - 11 ஆவது நாளாக தொடர்ந்த போராட்டம்! 1

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கும் அநீதிகள் இழைக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து 11 ஆவது நாளாக நேற்று மக்கள் நீதிகோரி போராட்டம் இடம்பெற்றது.

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பொதுமக்களுடன் இணைந்து நடை பவனியாக கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் முன்னால் உள்ள போராட்ட இடத்தினை வந்தடைந்தனர்.

இதன் போது அமைச்சரவை தீர்மானத்தை முழுமையாக அமுல்படுத்துங்கள் கல்முனை உப பிரதேச அலுவலகமாக கருதி மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத தீர்மானங்கள் அனைத்தையும் இரத்து செய்யுங்கள் காணி நிதி அதிகாரங்களை வழங்குங்கள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சுயாதீன தொழிற்பாட்டை உறுதிப்படுத்துங்கள் என பல்வேறு கோஷங்களை முன்வைத்து போராடி வருகின்றனர்.

இப்போராட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் செல்வராஜா கஜேந்திரன் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கொடீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments