காசா பகுதியில் இணைய சேவை துண்டிப்பு!

You are currently viewing காசா பகுதியில் இணைய சேவை துண்டிப்பு!

 

காசாவின் வடக்கு பகுதியில் மிகக் கடுமையான தாக்குதல் இன்று இரவு நடைபெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், காசா பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர் தாக்குதல் காரணமாக காசா உடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு இருப்பதாக இந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன

முன்னெப்போதும் இல்லாத அளவு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

ஹமாஸ் அமைப்பு, பலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழு மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

குறித்த தகவலை அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது. ஹமாஸ் மீது அமெரிக்கா விதிக்கும் இரண்டாவது சுற்று தடை இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரான் நிதியுதவி வழங்குவதை தடுக்கும் நோக்கத்துடனேயே ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது.

அத்துடன், ஹமாஸ் முதலீடு செய்துள்ள சொத்துகளையும், ஹமாஸுடன் இணைந்த நிறுவனங்களையும் முடக்கும் விதமாக இந்த பொருளாதார தடைகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க திறைசேரி அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள ஹமாஸ் மற்றும் பிற போராளிகளின் குழுக்களை ஈரான் ஆதரிக்கிறது என்பது அமெரிக்காவின் நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது.

அதன்படி, இந்த குழுக்களுக்கு ஈரான் நிதியுதவி வழங்குவதை தடுக்கும் நோக்கத்துடன் ஹமாஸ் மற்றும் ஈரானின் புரட்சிகர படை மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments