வடமராட்சியில் காதலன் இறந்தது தாங்காது காதலி தற்கொலை!!
வடமராட்சியில் சுகயீனம் காரணமாக காதலன் உயிர் இழந்ததை தாங்க முடியாத காதலி தானும் உயிரை மாய்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருபாலை மடத்தடி பகுதியினை சேர்ந்த இராசேந்திரம் இனிசா (வயது-21) என்ற யுவதியே உயிரிழந்தவர் ஆவார். காதலித்து வந்த வடமராட்சியை சேர்ந்த இளைஞன் நோய்வாய்ப்பட்டு கடந்த வாரம் உயிரிழந் தார் இதனால் மனமுடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக யுவதி இருந்துள்ளார். இந்நிலையில் யுவதி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
காதலனை பிரிந்த துயரில் காதலி உயிரிழப்பு! யாழில் சோகம்.
