காவல்த்துறை நாய்களுடன் விசேட சுற்றிவளைப்பு; குற்றங்களுடன் தொடர்புடைய 3,909 பேர் கைது!

You are currently viewing காவல்த்துறை நாய்களுடன் விசேட சுற்றிவளைப்பு; குற்றங்களுடன் தொடர்புடைய 3,909 பேர் கைது!

சிறீலங்கா முழுவதும் சுமார் 14 ஆயிரம் சிறீலங்கா காவல்த்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் வெவ்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய 3 ஆயிரத்து 909 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.”

– இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்த விசேட சுற்றிவளைப்பில் மதுபானம் அருந்திய நிலையில் 580 பேரும், போதைப்பொருட்களுடன் 1,250 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 645 பேரும், குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் தேடப்பட்டு வந்த 98 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் துப்பாக்கியைத் தம்வசம் வைத்திருந்த ஐவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்புக்கு உதவியாக 55 காவல்த்துறை நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன” இப்படியான சுற்றி வளைப்புக்குள் தமிழ் இளைஞர்கள் பழிவாங்கப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments