கிளிநொச்சியினை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா!

You are currently viewing கிளிநொச்சியினை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா!

கிளிநொச்சியில் ஐவருக்கும் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமை சேர்ந்த ஏழு பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய பரிசோதனையில் கிளிநொச்சி தொண்டமான்நகரத்தில் ( A 9 வீதியில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கும் கிளிநொச்சி தொலைத்தொடர்பு கோபுரத்திற்கும் இடைப்பட்ட பகுதி )தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரே விற்பனை நிலையத்தை சேர்ந்த 3 பேர்.மேற்படி விற்பனை நிலையத்தின் அருகில் இருக்கின்ற இன்னும் ஒரு விற்பனை நிலையத்தில் தொழில் புரியும் ஒருவர்.அருகிலுள்ள விற்பனை நிலையத்தில் கடமை புரிந்து கடந்த இரு நாட்களுக்கு முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கடற்படை தனிமைப்படுத்தல் முகாமில் இருக்கும் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.(இன்று போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவில்லை. நாளை பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று யாழ்போதனா மருத்துவமனை தெரிவித்துள்ளது

பகிர்ந்துகொள்ள