கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞன் கைது !

You are currently viewing கிளிநொச்சியில் கஞ்சாவுடன் இளைஞன் கைது !

கிளிநொச்சி- ஆனையிறவு பகுதியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடியில் வைத்து 21 வயதுடைய இளைஞர் ஒருவர் 390 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைதானது நேற்று(09.11.2023) மாலை இடம்பெற்றுள்ளது.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட வவுனியாவைச் சேர்ந்த சந்தேகநபர் மோட்டார் சைக்கிளில் கஞ்சாவினை எடுத்துச் செல்லும்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments