கிளிநொச்சியில் காணாமல் போன 14 வயது சிறுமி – தொலைபேசியில் வந்த மிரட்டல்!

You are currently viewing கிளிநொச்சியில் காணாமல் போன 14 வயது சிறுமி – தொலைபேசியில் வந்த மிரட்டல்!

கிளிநொச்சியில் 14 வயதான சிறுமி ஒருவர் காணவில்லை என சிறீலங்கா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பழைய கச்சேரி வீதி, கிளி நகர் பகுதியில் வசிக்கும் செந்தூரன் பகலினி என்ற 14 வயதுடைய சிறுமியே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

மேலும் குறித்த சிறுமி கடந்த 17ஆம் திகதியிலிருந்து காணவில்லை என சிறீலங்கா காவல்த்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, சிறுமி தொடர்பாக பெற்றோரிடம் சிறீலங்கா காவல்த்துறையினர் வினவியபோது, கடந்த 17 ஆம் திகதி மகளைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்ட இரண்டு நாட்களுக்கு பின்னர், தங்களுக்கு தொலைபேசியூடாக மிரட்டல் விடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், காணாமல் போயுள்ள சிறுமி தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் 0774188975 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பொலிஸாரால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments