கிளிநொச்சியில் சமூக தொற்று மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்’

You are currently viewing கிளிநொச்சியில் சமூக தொற்று மக்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவித்தல்’

கிளிநொச்சி மாவட்டத்தில் சமூகதொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் அவதானமாக செயல்பட வேண்டும் என சுகாதாரதரப்பு எச்சரிகை விடுத்துள்ளது

நேற்றையதினம்  (23)கொரோனா நோய் அறி குறிகளுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட 72 வயதான நபருக்கு பீசீஆர் பாரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் பணிபுரிந்த தொண்டமான் நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையமும் தனிமைப் படுத்தப்பட்டது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான நபர் வெலிகந்த சிக்ச்சை நிலையத்துக்கு மாற்றம் செய்யபட்டுள்ளார்

இதேவேளை இன்று  முதல் ஒரு வாரத்துக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகைளையும் மூட வட மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது

பகிர்ந்துகொள்ள