கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கான பல்கலை கழக விரிவுரையாளர்!

You are currently viewing கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்கு இலக்கான பல்கலை கழக விரிவுரையாளர்!

யாழ்.பல்கலைக்கழக- கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் ஒருவர் யானை தாக்குதலுக்கு இலக்காக படுகாயமடைந்துள்ளார்.

இன்று இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயத்திரி டில்றுக்‌ஷி (வயது32) என்பவரே படுகாயமடைந்துள்ளார். குறித்த விரிவுரையாளரும் இன்னொரு பெண்ணும் விடுதிக்கு நடந்து சென்றுள்ளனர்.

இதன்போது யானை குறுக்கே நின்றுள்ளது. இதனையடுத்து பயத்தினால் இருவரும் தப்பி ஓட முயற்சித்தபோது விரிவுரையாளரை யானை தாக்கியுள்ளது. 

இதனையடுத்து விடயம் தப்பி ஓடியவரால் அருகில் இருந்தவர்களுக்கு கூறப்பட்டு அங்கு ஆட்கள் கூடியதுடன் விரிவுரையாளர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள