கிளிநொச்சியில் 17பேர் கைது!

You are currently viewing கிளிநொச்சியில் 17பேர் கைது!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 24 மணிநேர காலப்பகுதியில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி சிறீலங்கா காவல்த்துறைக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய ஊரியான், முரசுமோட்டை, உமையாள்புரம் உருத்திரபுரம் , திருவையாறு , பகுதிகளில் காவல்த்துறை மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 8 உழவு இயந்திரங்களும், 9 டிப்பர்களும் பொலிசாரல் பிடிக்கப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் காவல்த்துறை விசாரணைகளின் பின்னர் காவல்த்துறை பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

பகிர்ந்துகொள்ள