கிளிநொச்சி ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – போத்தல் குத்து!

You are currently viewing கிளிநொச்சி ஊடகவியலாளர் மீது தாக்குதல்! – போத்தல் குத்து!

கிளிநொச்சி – உதயநகரில் உள்ள இணைய ஊடக அலுவலத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் நால்வர் கொண்ட குழுவினால், ஊடகவியலாளர் நடராசலிங்கம் துஷாந் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பொல்லுகளால் அவர் மீத தாக்குதல் நடத்தப்பட்டதுடன், போத்தல் ஒன்றை உடைத்து குத்தியதில், அவர் கைகளில் காயமடைந்துள்ளார்.

உதயநகர் பகுதியில் அமைந்துள்ள துஷாந்த் பணியாற்றிய இணைய ஊடகம் ஒன்றின் அலுவலகப் பகுதியில் நபர் ஒருவர் நின்றதாகவும், அவரை அங்கிருந்து வெளியேறப் பணித்த போது, குறித்த நபர் மேலும் சிலரை அழைத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மது போதையிலும் காணப்பட்டதாக” அவரது நண்பர் எதெரிவித்துள்ளார்.

சம்பவத்தின் போது அலுவலகத்தில் இருந்த கணினிகள் மற்றும் உபகரணங்கள் அடித்து நொருக்கப்பட்டு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. இதன்போது அலுவலகத்தில் இருந்த மேலும் ஒரு நபரும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவத்தை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கிய போதிலும் அவர்கள்விசாரணை செய்ய வரவில்லையென்று தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்குள்ளானவர் இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பகிர்ந்துகொள்ள