குடத்தனையில் 3 பெண்கள் காவல்த்துறையால் கைது!

You are currently viewing குடத்தனையில் 3 பெண்கள் காவல்த்துறையால் கைது!
குடத்தனையில் 3 பெண்கள் காவல்த்துறையால் கைது! 1

தமிழர் தாயகம் வடமராட்சி – குடத்தனையில் சிங்கள காவல்த்துறையினர் அராஜகம் எல்லை மீறிச் செல்கின்றது என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, நேற்று (01) வெள்ளிக்கிழமை காலை அப்பகுதி மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி மூன்று பெண்களை படுகாயப்படுத்திய காவல்த்துறை பிற்பகல் இரு பெண்களை கைது செய்துள்ளனர். 

காவல்த்துறையினர் தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு கொண்டு சென்ற இரு பெண்களே ஊரடங்கு சட்டத்தை மீறினர் என கைது செய்யப்பட்டனர். 

kaj

குடத்தனை, மாளிகைகாடு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (01) வெள்ளிக்கிழமை காலை அத்துமீறி நுழைந்த பருத்தித்துறை காவல்த்துறை  பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

காவல்த்துறையால் தாக்குதலுக்கு இலக்கான மூன்று பெண்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு உணவு எடுத்து சென்ற நிலையிலேயே குறித்த பெண்கள் இருவரும் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டி காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

மக்களோடு ஏன் முரண்பாடு

குறித்த வீட்டிற்கு நேற்று முன்தினம் (30) வியாழக்கிழமை சென்ற காவல்த்துறை வீட்டு வளவினுள் நின்ற ‘கென்ரர்’ ரக வாகனத்தை அத்துமீறி எடுத்து செல்ல முற்பட்டுள்ளனர். 

kajen

இதன்போது வீட்டில் இருந்தோர் காரணம் கேட்டனர். அப்போது, இந்த வாகனத்தில் கள்ள மணல் ஏற்றுவதாக எமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்று உள்ளன. அதனால் வாகனத்தை எடுத்து செல்கின்றோம் என காவல்த்துறையினர் கூறினர். 

அதற்கு வீட்டில் இருந்தோர் வாகனம் நீண்ட நாளாக இந்த இடத்திலையே தரித்து நிற்கிறது. வாகனத்தின் என்ஜனை தொட்டு பாருங்கள் அதில் சூடு இருக்கிறதா என பாருங்கள், வீட்டு வளவினுள் தரித்து நிற்கும் வாகனத்தை எவ்வாறு எடுத்து செல்ல முடியும் என காவல்த்துறையினரிடம் கேள்வி எழுப்பினர்.

அதனையும் மீறி காவல்த்துறையினர் வாகனத்தை எடுத்து செல்ல முற்பட்ட போது வீட்டாருக்கும் காவல்த்துறைக்கும் இடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.


பொலிஸார் மக்களை அச்சுறுத்தினர்

காவல்த்துறையினர் அட்டகாசத்தை அந்த வீட்டில் இருந்த இளைஞன் இளைஞன் கைத்தொலைபேசியில் காணொளி எடுத்துள்ளார். அதனை அவதானித்த காவல்த்துறையினர், சிறுவனிடமிருந்து கைத்தொலைபேசியை பறித்து, காணொளியை அழித்ததுடன் அந்த இளைஞனை தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

அதனால் வீட்டில் இருந்தோர் அபய குரல் எழுப்ப அயலவர்கள் கூடியதனால் காவல்த்துறையினர் காணொளி வெளியில் போக கூடாது எனவும், இங்கு நடந்த சம்பவம் தொடர்பில் எங்கேயும் முறைப்பாடு செய்ய கூடாது என  அவ்வாறு ஏதாவது தமக்கு எதிராக முறைப்பாடு செய்தால் கஞ்சா வைத்திருந்தீர்கள் எனக் கூறி கைது செய்வோம். கசிப்பு வழக்குகள் தொடருவோம் என மிரட்டிவிட்டு அங்கிருந்து வாகனத்தை எடுத்து செல்லாமல் திரும்பி சென்று இருந்தனர்.

பெண்கள், சிறுவர்கள் மீது காட்டுமிராண்டித்தன தாக்குதல்

வெள்ளிக்கிழமை காவல்த்துறையினர்,  குறித்த வீட்டுக்கு சென்று, வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்த பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் என வேறுபாடு இன்றி மூர்க்கத்தனமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காவல்த்துறையினர் தாக்குதலில் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார்.

kk

வீட்டினுள் காவல்த்துறையினர் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியமையால் வீட்டில் இருந்தோர் அவலக்குரல் எழுப்பியபோது அயல் வீட்டார்கள் குறித்த வீட்டில் இருந்தோரை மீட்க சென்ற போது அவர்கள் மீதும் பெண்கள், வயோதிபர்கள் என்ற வேறுபாடு இன்றி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார்கள்.

தாக்குதலுக்கு இலக்காகி மயக்கமடைந்த பெண் உட்பட மூன்று பெண்களும் மந்திகை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, பெட்டன் பொல்லினாலும், துப்பாக்கியினாலும் தனது அம்மாவை தாக்கியதாக, சிறுமி ஒருவர் தெரிவித்ததோடு, வயிற்றில் காலால் உதைத்தாகவும் தெரிவித்தார். 

காவல்த்துறையினர் காட்டுமிராண்டித்தனமான செயற்பாட்டிற்கு எதிராக வடமராட்சியில் சமூக இடைவெளியை பின்பற்றி மக்கள் போராட்டம் ஒன்றுக்கு தயாராகி வருகின்றனர் என சில பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

சொந்த மக்கள் தாக்கப்பட்டு வீதியில் வீழ்ந்து கிடக்கின்றபோது அப்பகுதியை சேர்ந்த எவரும் நீதி  கேட்க செல்லவில்லை. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அந்த மக்களோடு களத்தில் நிற்பதை அவதானிக்கு முடிகின்றது. 

kjn

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கே.சுகாஸ் நேற்று காலை அந்த இடத்திற்கு சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்ததுடன், காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவோரையும் பார்வையிட்டார். 

k

இதேவேளை, முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் மற்றும் கட்சியின் அங்கத்தவர்கள் பலரும் நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி வருகின்றனர். 

சட்டத்தரணி சுகாஸ் மேற்படி மக்களுக்காக இலவசமாக வாதாடவிருக்கின்றார் என உறுதியளித்துள்ளார். 

பகிர்ந்துகொள்ள