குடாரப்பில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்!

You are currently viewing குடாரப்பில் கரையொதுங்கிய மீனவரின் சடலம்!

யாழில் கடற்றொழிலுக்குச் ஞாயிறு (12-02-2023) சென்று தெப்பம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கி உள்ளது.

இந்த சம்பவத்தில், கரிதாஸ் வீதி, வள்ளிபுனம், மு/புதுக்குடியிருப்பு பகுதியைச் சேரந்த  39 வயதான பி.ரவிச்சந்திரன் என்ற மீனவரே சடலமாக கரையொதுங்கியுள்ளார்.

யாழ். வடமராட்சி கிழக்கு, குடாரப்பு பகுதியில் கடற்கரையில் இருந்து தெப்பத்தில் கடற்றொழிலுக்காக  ஞாயிறு (12) சென்றிருந்தார்.

இருவர் தொழிலுக்குச் சென்ற நிலையில் தெப்பம் கடலில் மூழ்கியுள்ளது.

இதன் போது ஒரு மீனவர் நீந்தி கரைசேர்ந்துள்ள நிலையில் குறித்த மீனவர் கடலில் மூழ்கி காணமல் போயுள்ளார்.

நேற்று அதிகாலை (14-02-2023)  குடாரப்பு பகுதியிலேயே சடலம் கரையோதுங்கியுள்ளது.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.சிவராசா மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments