குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து : நபர் ஒருவர் இறப்பு!

You are currently viewing குடியிருப்பு கட்டிடத்தில்  தீ விபத்து : நபர் ஒருவர் இறப்பு!

இன்று ஞாயிற்றுக் கிழமை காலை எல்வரூமில் (Elverum) உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த தீ விபத்தில் நபர் ஒருவர் பலியானார் என்று உள்நாட்டுப் காவல்த்துறை தகவல் தெரிவிக்கின்றது.

இந்த தீ விபத்தானது அதிகாலை 5.17 மணியளவில் ஏற்பட்டதாகவும், தீ விபத்துக் குறித்து அவசர சேவைப் பிரிவுக்கு அறிவிக்கப் பட்டதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆனாலும் தீ அணைக்கப்பட்ட போதிலும் வீட்டிற்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீட்டின் முகவரியில் ஒரு நபர் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது .

பகிர்ந்துகொள்ள