குடும்பத் தகராறு -மனைவியை கொலைசெய்த கணவன்!

You are currently viewing குடும்பத் தகராறு -மனைவியை கொலைசெய்த கணவன்!

குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கணவன் கொலைசெய்துள்ள சம்பவமொன்று மூதூர் தோப்பூர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர் .

தோபூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர் .

மனைவியின் ஆடையின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளதாக சிறீலங்கா காவற்துறையினரின் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த 33 வயதுடைய  கணவன் மூதூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments