கொடிகாமத்தில் விபத்து காவற்துறையினன் பலி! – மற்றொருவர் படுகாயம்!

You are currently viewing கொடிகாமத்தில் விபத்து காவற்துறையினன் பலி! – மற்றொருவர் படுகாயம்!

கொடிகாமம்- எருவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு சிறீலங்கா காவற்துறையினர் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை – கொடிகாமம் வீதி எருவன் பகுதியில் நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சடலம் பருத்தித்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் சாரதா வீதி, சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 25 வயதான கோ.கஜீபன் ஆவார். இவர் கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றைய உத்தியோகத்தர் நெல்லியடி சிறீலங்கா காவற்துறை நிலையத்தைச் சேர்ந்த உத்தியோகத்தர் என தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் சிறீலங்கா காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments