கொடிகாமம் பகுதியில் விபத்தில் சிக்கிய பெண் மரணம்!

You are currently viewing கொடிகாமம் பகுதியில் விபத்தில் சிக்கிய பெண் மரணம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சியின் கொடிகாமம் பகுதியில் நேற்று மாலை விபத்தில் சிக்கிய பெண் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை கொடிகாமம் தொடருந்து நிலையைத்தினை அண்மித்த பகுதியில் மிதி வண்டியில் பயணித்த குறித்த பெண் மீது அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று பின்பக்கத்தால் மோதியுள்ளது.

சம்பவத்தில் படுகாயம் அடைந்த மீசாலை வடக்கு பகுதியைச் சேர்ந்த அன்னலட்சுமி (வயது 65) என்பவர் சாவகச்சேரி தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்.

அவருடைய உடல் நிலை மோசமானதை அடுத்து அவர் அங்கிருந்து யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கின்றார்.

இருந்தபோதிலும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக கொடிகாமம் சிறீலங்கா காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments