கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம்!

You are currently viewing கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பட்டாளர், வசந்த முதலிகே தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து நாம் மிகுந்த கவலையடைந்துள்ளதாகவும், ஆர்ப்பாட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த கொடூரமான பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் எனவும், சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவற்கு பதிலாக பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், எதிர்ப்பாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்ற அவர்களின் நடவடிக்கைகளால் நியாயப்படுத்தப்படாத கடுமையான குற்றவியல் குற்றங்களை சுமத்துவது என்பன சர்வதேச சட்டத்திற்கு எதிரானது எனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments