கொரோனா எதிரொலி ; மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை!

  • Post author:
You are currently viewing கொரோனா எதிரொலி ;  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கிட்டு தற்கொலை!

சென்னை மாத்தூர் எம்.எம்.டி.ஏ பகுதியை சேர்ந்த 50 வயது நபருக்கு கடந்த 25-ம் தேதி எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி என தெரியவந்தது. சிகிச்சை பெற்று வந்த அவர் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இவர் அனுமதிக்கப்பட் டிருந்தார். மேலும் கொரோனா சிகிச்சை பெற்று வந்த இவர் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில், இன்று காலை கொரோனா சிகிட்ச்சை ப் பிரிவில் , கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நபர் நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகிலிருந்த நோயாளிகள் மருத்துவமனை காவல் அதிகாரியிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில் காவல் அதிகாரி கழிவறையின் கதவை உடைத்து பார்த்த போது கொரோனா நோயாளி, துண்டால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்தது.

இந்த தற்கொலை தொடர்பாக ஸ்டான்லி மருத்துவமனை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள