கொரோனா கொடூரம் : நோர்வேயில், இதுவரை 205 கொரோனா மரணங்கள்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : நோர்வேயில், இதுவரை 205 கொரோனா மரணங்கள்!

ஒஸ்லோவில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் வசிப்பவர்கள் இருவர், கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு சமீபத்திய நாட்களில் இறந்துள்ளனர் என்று தேசிய பராமரிப்பு இல்ல நிர்வாகம் இன்று ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.

ஒஸ்லோவில் இறந்த இரண்டு புதிய நபர்களும், ஏப்ரல் 25 சனிக்கிழமையன்று இறந்துள்ளார்கள் என்றும், இவர்கள் “Oppsalhjemmet” பராமரிப்பு இல்லத்தில் வசித்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் ஏப்ரல் 26 ஞாயிற்றுக்கிழமை இறந்த வர் “Nordseterhjemmet” பராமரிப்பு இல்லத்தில் வசித்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது . ஒஸ்லோவில் உள்ள பராமரிப்பு இல்லங்களில் இதுவரை மொத்தம் 31 பேர் கோவிட் -19 தோற்றால் இறந்துள்ளனர்.

நோர்வேயில் கொரோனா வைரஸ் தோற்றால் மொத்தம் 205 பேர் இதுவரை இறந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள