லண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை!

You are currently viewing லண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை!

லண்டனில் வசித்து வருகின்ற ஒரு குடும்பத்தில் ஏற்ப்பட்ட வாக்குவாதம் இரண்டு பச்சிளம் குழந்தைகளை பலியாக்கியுள்ளது.

லண்டன் இல்பேட்டில்(Ilford) உள்ள விநாயகம் ஸ்ட்டோர் கடைக்கு மேல் வசித்துவந்த தம்பதிகளுக்கு இடையே நேற்று நடந்த வாக்கு வாதத்தில் இரண்டு பச்சிளம் தமிழ்க் குழந்தைகள் குத்திக்கொலைசெய்யப்பட்டுள்ள கொடிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

40 வயது மதிக்கத்தக்க தாயகத்தில் வடமராட்சிக்கிழக்கு மாமுனையை சேர்ந்தவர் மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை 5.30 மணியளவில் கிழக்கு லண்டனின் இல்பேட்டில்(Ilford) இலுள்ள ஒரு வீட்டுக்கு காவல்த்துறையினர் அழைக்கப்பட்டார்கள்.

அங்கு சென்ற காவல்த்துறையினர் ஒரு வயது பெண் குழந்தை ஒன்றும், மூன்று வயது ஆண் குழந்தை ஒன்றும் கத்திக்குத்துக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

மருத்துவ உதவிக்குழுவினர் சோதித்ததில், அந்த பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது.அந்த மூன்று வயது ஆண் குழந்தை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

மேலும் அங்கிருந்த 40 வயது நபர் ஒருவரும் கத்திக்குத்துக் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், அவரது தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை. எனவும்

மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், காவல்த்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

லண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை! 1
லண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை! 2
லண்டனில் 2 தமிழ் குழந்தைகள் கத்தியால் குத்தி கொலை! 3
பகிர்ந்துகொள்ள