கொரோனா கொடூரம் : MOSS நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

  • Post author:
You are currently viewing கொரோனா கொடூரம் : MOSS  நகராட்சியில் புதிய கொரோனா மரணம்!

கொரோனா நோய்த்தொற்றின் விளைவாக “Orkerød” பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர் இறந்துவிட்டதாக நகராட்சி தெரிவித்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, “Orkerød” பராமரிப்பு இல்லத்தில் ஒரு புதிய கொரோனா மரணம் குறித்து எங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும், இறந்தவர் 80 வயது வயோதிபர் என்றும் நகரசபைத் தலைவர் “Hanne Tollerud” இன்று திங்களன்று கூறியுள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் MOSS நகராட்சியில் மேலதிக தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91 என்றும், கடந்த 24 மணி நேரத்தில் மூன்று சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் மேலும் கூறப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் : VG

பகிர்ந்துகொள்ள