கொரோனா சென்னை : தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

  • Post author:
You are currently viewing கொரோனா சென்னை : தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இன்று 27 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்று அதிகபட்சமாக சென்னையில் 15 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை, சுமார் 59 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இன்று மட்டும், 5978 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில், 33 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை, தமிழகத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக உள்ளது. மேலும், இன்று 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 662 ஆக உள்ளது.

பகிர்ந்துகொள்ள