கொரோனா பிருத்தானியா : வைரசால் பலியானோர் எண்ணிக்கை 20,319 ஆக உயர்வு!

  • Post author:
You are currently viewing கொரோனா பிருத்தானியா : வைரசால் பலியானோர் எண்ணிக்கை 20,319 ஆக உயர்வு!

பிருத்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோர் எண்ணிக்கை தற்போது 20,319 ஆக உயர்ந்துள்ளது.

உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக பிருத்தானியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் பிருத்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பலியானோரின் எண்ணிக்கை தற்போது 20 ஆயிரத்தைத் கடந்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், “24 மணி நேரத்தில் 4,913 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,48,377 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 24 மணி நேரத்தில் 813 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அங்கு கொரோனா வைரஸ் தொற்று பலியானோரின் எண்ணிக்கை 20,319 ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள