கொரோனா வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட்-19’ என பெயர் அறிவிப்பு

  • Post author:
You are currently viewing கொரோனா வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட்-19’ என பெயர் அறிவிப்பு

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தநிலையில் கொரோனா வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு ‘கோவிட் 19’ என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

கொரோனா வைரஸால் உருவாகியுள்ள நோய்க்கு கோவிட்-19  என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரேயேசஸ் கூறும்போது, கொரோனா வைரசிற்கு கோவிட்-19 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

இந்தப் பெயர் பூமியில் எந்தவொரு இடத்துக்கோ, மிருகத்துக்கோ, தனிநபருக்கோ, குழுவுக்கோ இதுவரை வைக்கப்படவில்லை.  சி ஓ வி ஐ டீ என்ற இந்தப் பெயரில் சி ஓ என்பது கொரோனா என்ற வார்த்தையையும், வி ஐ என்பது வைரஸ் என்ற வார்த்தையையும், டீ என்பது டிசீஸ் எனப்படும் நோய் என்ற வார்த்தையையும் குறிப்பதாகவும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.  மேலும் கொரோனா சார்ஸ் வகை வைரஸ் குடும்பத்தை சார்ந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 மற்றும் 2003ம் ஆண்டுகளில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலுக்கு 774 பேர் பலியாகி இருந்தனர்.  இந்த நிலையில், அதன் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள