கொலம்பியாவில் விபத்துக்குள்ளான விமானம் ! 5 வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள் !

You are currently viewing கொலம்பியாவில் விபத்துக்குள்ளான விமானம் ! 5 வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்ட 4 குழந்தைகள் !

கொலம்பியாவில், வனப்பகுதியில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 4 குழந்தைகள் 5 வாரத் தேடலுக்குப் பின் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் மே முதலாம் திகதி, சான் ஹோஸ் நகரம் நோக்கி சென்ற சிறிய ரக பயணிகள் விமானம் எந்திரக்கோளாறால் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் 2 விமானிகளும், ஒரு பெண் பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் 13, 9 மற்றும் 4 வயதிலான குழந்தைகள், ஒரு வயதே ஆன தங்கள் தம்பியை தூக்கிக்கொண்டு வனப்பகுதியில் உதவி தேடி அலையத் தொடங்கினர்.

பழங்குடி மக்கள் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன், இரவு பகலாக வனப்பகுதியை சல்லடையிட்ட ராணுவ வீரர்கள், 5 வாரத் தேடலுக்குப் பின் 4 குழந்தைகளையும் மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட குழந்தைகள் ஹெலிகப்டர் மூலம் மருத்துவமனை அனுப்பிவைத்தனர். அவர்கள் நலமுடன் உள்ளதாக கொலம்பியா அதிபர் தெரிவித்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments