கோப்பாயில் சொகுசு பேருந்து மோதி ஒருவர் பலி!

You are currently viewing கோப்பாயில் சொகுசு பேருந்து மோதி ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் தனியார் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்று இரவு 8 மணியளவில் கோப்பாய் இராச வீதியில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து பேருந்து சாரதி தப்பியோடியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சொகுசு பேருந்தை தாக்க முயன்றனர். அதில் கொழும்பு செல்லும் பயணிகள் இருந்த நிலையில், பொலிசார் தலையிட்டு அவர்களை பாதுகாப்பாக வெளியேற்றினர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments