கோப்பாய் கல்வியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!

You are currently viewing கோப்பாய் கல்வியற் கல்லூரி கொரோனா வைத்தியசாலையாக மாற்றம்!

யாழ்ப்பாணம், கோப்பாய் கல்வியற் கல்லூரி கொரோனா தடுப்பு வைத்தியசாலையாக மாற்றும் வகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் நிலையில் வைத்தியசாலைகளின் எண்ணிக்கையும் அதிக வேண்டியதால் யாழ்ப்பாணத்தில் மருதங்கேணியில் ஓர் வைத்தியசாலை அமைக்கப்பட்ட நிலையில் மற்றுமோர் வைத்தியசாலையாக கோப்பாய் கல்வியற் கல்லூரி மாற்றப்படவுள்ளது.

இதற்காக தற்போது கோப்பாய் கல்வியற் கல்லூரியில் இயங்கும் கொரோனா தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 217 பேரும் நாளை வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு கட்டிடம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

அவ்வாறு கையளிக்கப்படும் கட்டிடத்தின் மாணவர்கள் விடுதி வைத்தியர்கள் விடுதியாகவும் கல்விக் கூடம் வைத்தியசாலையாகவும் மாற்றப்படவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் உறுதி செய்தனர்.

பகிர்ந்துகொள்ள