கோப்பாய் பகுதியில் ஹெரோயின் போதை ஊசி மருந்துகளுடன் இருவர் கைது !

You are currently viewing கோப்பாய் பகுதியில் ஹெரோயின் போதை ஊசி மருந்துகளுடன் இருவர் கைது !

 யாழ்.கோப்பாய் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட போதைப் பொருள் மற்றும் ஊசி போன்ற பொருட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு சிறீலங்கா காவற்துறையினர் தொிவித்திருக்கின்றனர்.

விசேட குற்றத்தடுப்பு பிரிவின் உப சிறீலங்கா காவற்துறை பரிசோதகர் மேனன் தலைமையிலான பொலிஸ் குழு குறித்த இருவரையும் கைது செய்துள்ளது.

கைதானவர்கள் யாழ்.அரசடி மற்றும் கோப்பாய் பகுதிகளை சேர்ந்த 28 வயதானவர்களாவர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் அதிரடியாக சம்பவ இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது கைதானவர்களிடமிருந்து 10 ஊசிகள், இரண்டு கிராம் ஐஸ் போதைப் பொருள், ஒன்றரை கிராம் ஹெரோயின் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments