சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்.மாணவன் முதலிடம்!

You are currently viewing சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்.மாணவன் முதலிடம்!

 

சர்வதேச மனக் கணித போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த விக்னேஸ்வரன் ருஷாந் முதலிடத்தை பெற்றுள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற 80 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவரர்கள் பங்குபற்றிய போட்டியில் , இலங்கை சார்பில் கலந்துகொண்டதுடன்  Champion பட்டத்தை பெற்ற ஒரே ஒருவர் என்பது பாராட்டுக்குரியது.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மலேசியாவில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இடம்பெற்றது.

இந்த போட்டியில் உலகளாவிய ரீதியிலே 80 இற்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 62 மாணவர்கள் இதில் பங்குபற்றினர்.

இதில் கிருபாகரன் தர்சானந், செந்தில்நாதன் சேசாளன், கஜேந்திரன் லவின், வானதி சிவநேசன் ஆகியோர் தத்தமது பிரிவுகளில் சர்வதேச ரீதியாக மூன்றாம் இடங்களை தமதாக்கிக் கொண்டனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments