சிங்கப்பூரில் 13 வயது மாணவனை கோடரியால் வெட்டிக்கொன்ற 16 வயது மாணவன்!!

You are currently viewing சிங்கப்பூரில் 13 வயது மாணவனை கோடரியால் வெட்டிக்கொன்ற 16 வயது மாணவன்!!

சிங்கப்பூரில் பாடசாலை ஒன்றில் மாணவன் ஒருவன் சக மாணவனால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அந்த நாட்டை அதிர வைத்துள்ளது.

சிங்கப்பூரில் மதிப்புமிக்க பாடசாலை ஒன்றாக அறியப்படும் ரிவர் வேலி பாடசாலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. 

அப்போது மாணவர்கள் சிலர் பாடசாலையிலுள்ள கழிவறைக்கு சென்றபோது அங்கு சக மாணவன் ஒருவன் இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ந்து போயினர். 

இதுபற்றி அவர்கள் ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன்பேரில் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்த்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். 

மேலும் மாணவனின் உடலுக்கு அருகே கிடந்த இரத்தம் படிந்த கோடாரியை கைப்பற்றி பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்ட அந்த மாணவன் 13 வயது சிறுவன் என்பதும், அதே பாடசாலையில் படிக்கும் 16 வயது சிறுவன் அவனை கோடாரியால் வெட்டி கொடூரமாக கொலை செய்ததும் தெரியவந்தது. 

இதையடுத்து காவல்த்துறையினர் அந்த 16 வயது சிறுவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

மாணவனின் இந்த வெறி செயலுக்கான காரணம் குறித்து சிறீலங்கா காவல்த்துறையினர் அவனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments