சிங்கப்பூர் சென்றடைந்தார் கோட்டா! – பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பினார்!

You are currently viewing சிங்கப்பூர் சென்றடைந்தார் கோட்டா! – பதவி விலகல் கடிதத்தையும் அனுப்பினார்!

சிறீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலைத்தீவிலிருந்து புறப்பட்ட சிறீலங்கா ஜனாதிபதி, அவரது பாரியார் மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சிங்கப்பூரில் தரையிறங்கியுள்ளனர். சவுதி அரேபியா விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக, அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தாவுக்கு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதேவேளை,ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் தனது இராஜினாமா கடிதத்தை சமர்பிப்பதாக ஜனாதிபதி அறிவித்திருந்தார். என்பது குறிப்பிடத்தக்கது

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments