சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி !

You are currently viewing சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட வான்வழி தாக்குதலில் 15 பேர் பலி !

சிரியாவின் கிழக்கு பகுதியில் உள்ள டிர் எஸ் சோர் நகரில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தாக்குதலானது நேற்று(26.03.2024) இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரான் புரட்சிப்படையின் முக்கிய தளபதி, அவரது 2 பாதுகாவலர்கள், 9 ஈராக் கிளர்ச்சியாளர்கள் உள்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், 19 இராணுவ வீரர்கள், 13 பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தாக்குதலை அமெரிக்கா நடத்தியதாக சிரிய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ள நிலையில் சிரியாவின் குற்றச்சாட்டிற்கு அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments