சிறீலங்காவில் இன்று நாங்கள் காண்கின்ற விடயங்கள் இதனை விட மோசமானவை!!

You are currently viewing சிறீலங்காவில் இன்று நாங்கள் காண்கின்ற விடயங்கள் இதனை விட மோசமானவை!!

முந்தைய அரசாங்கத்துடனான எனது அனுபவங்களையும், நான் விசேட அறிக்கையாளராக இருந்தபோது அரசாங்கங்களுடனான எனது அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அரசாங்கங்கள் எப்போதும் ஒற்றை கல்லால் உருவானவையில்லை, சிறந்த எண்ணப்பாங்குகளும் ஆழமான எதிர்ப்புணர்வுகளும் கொண்டவை.

முன்னைய அரசாங்கத்துடனான ஈடுபாட்டின் போது நான் அதிகம் எதிர்கொண்ட தடை என்னவென்றால் அவர்கள் ஜனாதிபதியும் பிரதமரும் பொருத்தமான நிலைமாற்றுக்கால நிகழ்சிநிரலை உருவாக்க தயக்கம் கொண்டிருந்தனர்.

அவர்கள் அதனை முழுமையாக ஆதரிக்கவும் இல்லை ,அதற்கு எதிராகவும் செயற்படவில்லை,அதனை அப்படியே நடுவானில் விட்டனர் ஏனையவர்கள் அதனை தாக்ககூடிய இலக்காக மாற்றினார்கள்.

அவர்கள் முன்னைய இலங்கை அரசாங்கங்கள் எதனை செய்ததோ அதனையே முன்னைய அரசாங்கத்தின் பிரதமரும் ஜனாதிபதியும் செய்தனர் சர்வதேச சமூகத்தின் ஆதரவை பெறுவதற்கான நடவடிக்கைகள் மாத்திரம் போதுமானவை என கருதினார்கள்.

நிலைமாற்றுக்கால நீதி தொடர்பான தங்கள் கடப்பாடுகளை நிறைவேற்ற முன்வரவில்லை.இலங்கையில் இன்று நாங்கள் காண்கின்ற விடயங்கள் இதனை விட மோசமானவை என்பதை தெரிவிப்பதில் கவலையடைகின்றேன்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments