சிறீலங்காவில் தொடரும் கொரோனா தொற்று!

You are currently viewing சிறீலங்காவில் தொடரும் கொரோனா தொற்று!

இலங்கையில் கொரோனா தொற்றால் மேலும் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 214 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்றைய நாள் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ள 4 பேரும் புனாணை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என சிறீலங்கா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட 151 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, 117 பேர் சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளதுடன் இதுவரை 56 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தாக்கத்திற்குள்ளான 7 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள