சிறீலங்காவில் நேற்று மட்டும் 3 297 பேருக்குக் கொரோனா 42 பேர் பலி!

You are currently viewing சிறீலங்காவில் நேற்று மட்டும் 3 297 பேருக்குக் கொரோனா 42 பேர் பலி!

சிறீலங்காவில் நேற்று மட்டும் 3 297 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 195 844ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 42 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மரணங்கள் கடந்த மே 17ஆம் திகதி முதல் ஜூன் முதலாம் திகதிவரை நிகழ்ந்துள்ளன. உயிரிழந்தவர்களில், 25 ஆண்களும் 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பு ஆயிரத்து 608ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments