சிறீலங்காவுக்கு பட்டுக்குஞ்சம் கட்ட முனையும் பிபிசி தமிழ்!

You are currently viewing சிறீலங்காவுக்கு பட்டுக்குஞ்சம் கட்ட முனையும் பிபிசி தமிழ்!

70 ஆண்டுகளுக்கு மேலாக சிறீலங்காவில் ஜனநாயகம் இறந்து அரசியல் நெருக்கடியில் துடித்துக்கொண்டிருக்கும் சிறீலங்கா இனவாதத்திற்கும், 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்மக்களை இராணுவ அடக்குமுறையால் தமிழின அழிப்பை செய்துவரும் சிறீலங்கா இனவழிப்பு இராணுவத்திற்கும் மனிதநேய புத்தாடை உடுத்தி அழகு பார்க்க முனைகிறது பிபிசி தமிழ்.

சிறீலங்கா அதிகார வர்க்கங்களின் கைக்கூலிகளாக காலம் காலமாக சில பிபிசி தமிழ் ஊடகவியலாளர்கள் கையாளப்படுகின்றார்கள் என்பதற்கு கடந்த 28 யூலைத் திங்கள் அன்று பிபிசி தமிழின் இணையத்தில் வெளிவந்த செய்தி சான்றாகின்றது.

2009 இலும் அதற்கு முற்பட்டகாலத்திலும் தமிழ் மக்களும் அவர்களின் பாதுகாப்பாளராக இருந்த விடுதலைப்புலிகளும் படுகொலைசெய்யப்படுகின்றபோது பயங்கரவாதிகள் என்ற போர்வைக்குள் அடக்கி தமிழின அழிப்பை வெளிக்கொண்டு செல்லாது மூடிமறைத்த பிபிசி இன்றுவரை தமிழ்மக்களின் உரிமைப்போராட்டத்திற்கு முட்டுக்கட்டையான செய்திகளையும் அல்லது தமிழ்மக்களின் உண்மைகளை மூடிமறைக்கின்ற வேலைகளையும் கச்சிதமாக செய்கின்றார்கள் என்பதை உலகத்தமிழ் மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.

பிருத்தானியாவின் சணல் 4 தொலைக்காட்சி தமிழ்மக்களின் நீதியான போராட்டத்தினை புரிந்கொண்ட அளவிற்கு பிபிசி தமிழ் தமிழினத்திற்கு நேர் எதிரா இயங்குவதையே எம்மால் அவதானிக்க முடிகிறது இதற்கு ஒரே ஒருகாரணத்தை வெளிப்படையாகவும் உறுதியாகவும் கூறமுடியும் அது தமிழினத்தை அழித்த அரசுகளின் கைப்பொம்மையாக இயங்குவதுதான் இவர்கள் இதிலிருந்து மீளும்வரை இவர்களிடம் நியாயம் நீதி இருக்காது வெறும் கண்துடைப்புக்காக அவ்வப்போது சில செய்திகளை பிரசுரம் செய்து அதற்குள் விசத்தை பருக்குவார்களே தவிர நேர்மையாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

இவர்களிடம் ஊடகதர்மம் இறந்து வெகுநாளாகிவிட்டது என்ற வேதனையையும் இங்கு பதிவு செய்கின்றோம்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments