சிறீலங்கா காவல்துறை மீது தாக்குதல்!!

You are currently viewing சிறீலங்கா காவல்துறை மீது தாக்குதல்!!

கிளிநொச்சி,தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லாறு பகுதியில் காவல்துறை மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் இருந்த இரண்டு வாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) குறித்த பகுதியில் வன்முறைச் சம்பவம் இடம்பெறுவதாக காவல்த்துறையினரின் அவசர சேவை இலக்கமான 119 இற்கு பிரதேச மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அந்த பிரதேசத்திற்கு விசாரணைக்காக சென்ற விசேட பொலிஸ் பிரிவினர் மீது வாள் வெட்டு வன்முறை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பிலேயே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் 4 காவல்த்துறையினர் காயமடைந்துள்ளதுடன் இருவர் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும்.

மேலும் இருவர் சாதாரண காயங்களுடன் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments