சிறீலங்கா காவல்த்துறையின் திட்டமிட்ட பழிதீர்ப்பு!முன்னாள் போராளி கைது!

You are currently viewing சிறீலங்கா காவல்த்துறையின் திட்டமிட்ட பழிதீர்ப்பு!முன்னாள் போராளி கைது!

வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பிரதேசத்தில் முன்னாள் போராளி ஒருவர் கிளைமோர் குண்டு உள்ளிட்ட வெடிபொருள்களுடன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரியில் இராணுவச் சிப்பாயை தாக்கி விட்டு தலைமறைவாகி இருந்து பின்னர் நீதிமன்றினால் விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளியே அவரது மீன்வாடியில் வைத்து நேற்று மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து கிளைமோர் வெடிகுண்டு, சார்ஜர் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

பயங்கரவாத விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார் என்று காவல்த்துறையினர் தெரிவித்தனர்.

ஆனாலும் இந்த நடவடிக்கையானது சிறீலங்கா காவல்த்துறையின் திட்டமிட்ட பழிதீர்ப்பு என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments