சிறீலங்கா புலனாய்வாளர்களால் எங்களுக்கு அச்சுறுத்தல்!

You are currently viewing சிறீலங்கா புலனாய்வாளர்களால் எங்களுக்கு அச்சுறுத்தல்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நடாத்தப்படும் போராட்டங்களில் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக யாழ்.மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.

இன்று யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள ஐ.நா.அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒவ்வொரு மாதமும் 30 ஆம் திகதி பறிகொடுத்த தமது பிள்ளைகளை மீட்டுத் தருமாறு கோரியே போராட்டங்களை மேற்கொள்கின்றபோதும் அந்த இடத்தில் புலனாய்வாளர்கள் குவிக்கப்படுவதாக அவர் கூறினார்.

மேலும் ஏன் அவர்கள் தம்மை படமெடுத்து வீடியோ எடுத்து அச்சுறுத்தும் பாணியில் செயற்படுகிறார்கள் என்றும் யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி கேள்வியெழுப்பினார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments