சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை முட்டுக்காலில் நிறுத்தி துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல்!

You are currently viewing சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை முட்டுக்காலில் நிறுத்தி துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல்!

நேற்று முன்தினம் 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை பி.ப 5.30 மணியளவில் அனுரதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தமிழ் அரசியல் கைதிகளை முட்டுக்காலில் நிறுத்தி துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
தமிழர்கள் மீதான இனவெறியுடன் அமைச்சர் மேற்கொண்ட கொலை அச்சுறுத்தல் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
இவரது செயற்பாடுகளுக்காக இவரது பதவி பறிக்கப்படல் வேண்டும் என்பதுடன் இவரைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
அனுரதபுரத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளது குடும்பங்கள் பெரும் அச்சத்திலும் குழப்பத்திலும் உள்ளார்கள்.
உடனடியாக அவர்கள் தமது சிறையிலுள்ள தமது உறவினர்களை பார்வையிட உடனடியாக அனுமதிக்கப்படல் வேண்டும்.

செ.கஜேந்திரன்
பாராளுமன்ற உறுப்பினர்

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments