சீனா பதிலடி : அமெரிக்காவின் கொரோனா தொற்று வழக்கு அபத்தமானது!

  • Post author:
You are currently viewing சீனா பதிலடி : அமெரிக்காவின் கொரோனா தொற்று வழக்கு அபத்தமானது!

கொரோனா தொற்று தொடர்பாக சீனா மீது அமெரிக்கா வழக்கு தொடர்ந்து உள்ளது. இது அபத்தமானது என்று சீனா கூறி உள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் காரணமாக தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சீனா 149 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என ஜெர்மனியின் உள்ளூர் பத்திரிகை ஒன்று கட்டுரை வெளியிட்டது.

அது மட்டுமின்றி, வைரஸ் எப்படிப் பரவியது என்பதைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்ப இருப்பதாக அமெரிக்காவும் தெரிவித்தது.

ஜெர்மனி, அமெரிக்கா மட்டுமின்றி கொரோனா தொற்றால் நாளுக்கு நாள் மரண எண்ணிக்கைகளையும், பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டுவரும் ஐரோப்பிய நாடுகள் பல சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன.

சீனாவுக்கு எதிராக அமெரிக்க நீதி மன்றத்தில் “Missouri” மாகாணம் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக அமெரிக்காவில் முதலில் வழக்கு போட்ட மாகாணம் என்ற பெயரை இதன்மூலம் Missouri மாகாணம் பெற்றுள்ளது.

Missouriயின் கிழக்கு மாவட்ட நீதி மன்றத்தில் இந்த வழக்கை அட்டார்னி ஜெனரல் எரிக் சுமிட் (Attorney General Eric Summit) தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சீனா ஜெர்மனி வெறுப்பை உமிழ்வதாகவும், உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தீவிரத்தொற்று நோய்க்குக் குறிப்பிட்ட ஒரு நாட்டைக் குறை கூறி இழப்பீடு கேட்பது மோசமான செயல் என்றும்,இது அயல்நாட்டு வெறுப்பையும், தேசியவாதத்தையும் தூண்டும் செயல் எனவும் சீனா விமர்சித்தது.

கொரோனா வைரஸ் தோன்றியது எவ்வாறு என்பதைக் கண்டறிவதற்கான அமெரிக்க விசாரணைக் குழு வருமானால் அதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறிவிட்டது. மேலும், இந்த விவகாரம் தொடர்பில் சீன வெளியுறவுத் துறை அளித்திருக்கும் விளக்கத்தில்,இந்த கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவான எதிரி.

உலகின் எப்பகுதியிலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம்.எஞ்சிய நாடுகளைப் போலவே சீனாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சீனா குற்றவாளிகள் அல்ல. வைரஸால் பாதிக்கப் பட்ட ஒரு நாடு அதை உருவாக்கியதாகக் கூறுவது உண்மையல்ல.

அதே நேரம் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர சீனா எடுத்த முன்மாதிரியான முயற்சிகளையும் அதில் கிடைத்த மதிப்புமிக்க அனுபவத்தையும் நாங்கள் உலக சமுதாயத்தின் முன்பு வெளிப்படுத்தியதற்காக எங்களைச் சர்வதேசம் பாராட்டியதை நினைவில் கொள்ள வேண்டும்.

2008 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிதி நெருக்கடிதான் உலகளாவியப் பொருளாதார நெருக்கடியாக மாறியது.இதற்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வே.ண்டும் என யாராவது கேட்டார்களா?” என்றும் சீனா தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜெங் ஷுவாங் (Zheng Shuang) கூறியதாவது:-

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு உண்மை மற்றும் சட்டபூர்வமானது இல்லை. இது அபத்தமானது. இந்த வழக்கு தீங்கிழைக்கும் துஷ்பிரயோகமாகும். இது சர்வதேச சட்டத்தில் சமமான இறையாண்மையின் அடிப்படை சட்டம் மற்றும் கொள்கையை மீறுகிறது.

தொற்றுநோய்களில் சீன அரசாங்கத்தின் பதில் அமெரிக்க நீதிமன்றங்களின் எல்லைக்குட்பட்டது அல்ல. இதுபோன்ற கட்டுப்பாடுகள் துஷ்பிரயோகம் செய்வது அமெரிக்காவில் உள்நாட்டில் தொற்றுநோய்க்கு பதிலளிப்பதற்கு உகந்ததல்ல என்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு எதிரானது என்றும் ஜெங் கூறினார்.

பகிர்ந்துகொள்ள