சுப்பர்மடத்தில் உறங்கிய இளைஞன் தாக்கப்பட்டு வீதியில் வீச்சு!

You are currently viewing சுப்பர்மடத்தில் உறங்கிய இளைஞன் தாக்கப்பட்டு வீதியில் வீச்சு!

பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் நேற்று பிற்பகல் கடற்கரை ஓய்வுக்கொட்டகையில் உறங்கிய இளைஞன் இரும்புக் கம்பியினால் தாக்கப்பட்டு வீதியால் இழுத்துச் சென்று வீசிப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் சுப்பர்மடத்தைச் சேர்நத 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே பலத்த அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன் பகையின் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மூவர் இணைந்து இரும்புக் கம்பியினால் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் வீதியால் இழுத்துச் சென்று வீசியுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள