சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்பப்பெறுவதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது

You are currently viewing சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்பப்பெறுவதாக டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது

டெஸ்லா நிறுவனம், சுய ஓட்டுதல் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் மின்சார வாகனங்களை திரும்பப்பெறுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2016 முதல் 2023 வரை விற்பனையான, டெஸ்லாவின் S, X, 3 மற்றும் Y மாடல் கார்களை திரும்பப்பெறுவதாக வெளியான அறிவிப்பை தொடர்ந்து, அந்நிறுவன பங்குகள் சுமார் 5 சதவீதம் சரிவை சந்தித்தன.

இந்நிலையில் ஓட்டுநர் உதவிக்காக வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால், விபத்து நேரிடும் அபாயம் இக்கார்களில் அதிகரிக்கக்கூடும் என அமெரிக்க வாகன ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டிருந்தது.

இதற்கு தீர்வாக, மேம்படுத்தப்பட்ட மென்பொருள் வெளியிடப்படும் என டெஸ்லா நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments