சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 18 பேர் உயிரிழந்தனர்!

You are currently viewing சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 18 பேர் உயிரிழந்தனர்!

மேற்கு மெக்சிகோவில் சுற்றுலா பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மாநிலத் தலைநகரான டெபிக் மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலமான புவேர்ட்டோ வல்லார்டா இடையே சனிக்கிழமை இரவு பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரவிக்கப்பட்டுள்ளது.

“முதல் கணத்தில் இருந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி கவனம் செலுத்தும் வகையில், மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுடன் இணைந்த முறையில் பணியாற்றியதாக” மாநில சட்டத்தரணி அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, 11 பெண்களும் 7 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

சிகிச்சை பெற, குறைந்தது 11 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
பழையவை
புதியவை அதிக வாக்குகள் பெற்றவை
Inline Feedbacks
View all comments