சுவிசில் பரபரப்பு: பயணிகளுடன் ரயிலை கடத்திய மர்ம நபர் சுட்டுக்கொலை!

You are currently viewing சுவிசில் பரபரப்பு: பயணிகளுடன் ரயிலை கடத்திய மர்ம நபர் சுட்டுக்கொலை!

சுவிசில் பயணிகளுடன் தொடரூந்தை கடத்திய நபரை காவற்துறையினர் துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளனர். மேலும் பணயக்கைதிகளையும் மீட்டுள்ளனர்.

சுவிசில் 14 பயணிகள் மற்றும் 1 தொடரூந்து ஊழியரும் யவெர்டனில் உள்ள தொடரூந்து நிலையத்தில் நேற்றிரவு (09-02-2024) நின்று கொண்டிருந்த தொடரூந்தில் மர்ம நபர் கடத்தியுள்ளார்.

அந்த மர்ம நபர் பயணிகள் மற்றும் நடத்துனரை கத்தி மற்றும் கோடாரியால் மிரட்டி தொடரூந்தில் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் நடத்துனர் காவற்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவற்துறையினர் முதலில் புலனம் மூலம் அந்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த நபர் முதலில் ஈரானின் பிரதான மொழியான பார்சி மொழியிலும் அதன் பிறகு ஆங்கிலத்திலும் பேசியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தை சுமார் 4 மணித்தியாலமாக தொடர்ந்த நிலையில், இறுதியில் தொடரூந்தில் அதிரடியாக காவற்துறையினர் நுழைந்துள்ளனர்.

இதனால் கோபமடைந்த அந்த நபர் கோடாரியால் காவற்துறையினரை தாக்க பாய்ந்ததால் வேறு வழியில்லாமல் காவற்துறையினர் அந்த கடத்தல்காரனை சுட்டுக் கொன்றனர்.

இதையடுத்து பணயக்கைதிகளாக இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments