செல்வச்சந்நிதியில் தறுதலைகளின் அட்டகாசம்!!

You are currently viewing செல்வச்சந்நிதியில் தறுதலைகளின் அட்டகாசம்!!

வட தமிழீழம், தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் மதுபோதையில் அட்டகாசம் செய்த ரௌடிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு மதுபோதையில் ஆலயத்திற்கு வந்து, பொதுமக்களிற்கு அசெளகரியம் ஏற்படுத்தியவர்களை வல்வெட்டித்துறை காவல்த்துறையினர் எச்சரித்துள்ளனர். இதன்போது, மதுபோதை ரௌடிகள் சிலர், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலரை தாக்க முயன்றனர்.

இதனால் அவர்களை வல்வெட்டித்துறை சிறீலங்கா காவல்த்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, ஆலய வளாகத்தைவிட்டு பொதுமக்களை வெளியேறும்படியும், வர்த்தக நிலையங்களை மூடும்படியும் ஆலய நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பகிர்ந்துகொள்ள